Uncategorized

யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும்.

நீதானே சிவாஜி கணேசன்?‘..-இப்படிக் கேட்டது காஞ்சிப் பெரியவர்…

‘ஆமாங்கய்யா! நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாராம் சிவாஜி…!!!

காஞ்சிப்பெரியவர் – சிவாஜி சந்திப்பில் …அப்புறம் நடந்ததை சிவாஜியே சொல்கிறார்…

காஞ்சிப் பெரியவர் சொன்னாராம்… , “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது? என்றேன். ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள். திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது? என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள்.

தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது ?’ என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். ..யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார். அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ? எத்தனை அனுக்கிரஹம்! எண்ணிப் பாருங்கள்.”-

-இப்படி பக்திப் பரவசத்தோடு சொல்லியிருக்கிறார் சிவாஜி..!

– வாசுதேவன் ஸ்ரீரங்கராஜன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button