ஒவ்வொரு மூங்கிலும் புல்லாங்குழல்/திரு வெ.பெருமாள் சாமி நூலாசிரியர்/நூல் அறிமுக விழா


ஒவ்வொரு மூங்கிலும் புல்லாங்குழல்

திரு வெ.பெருமாள் சாமி நூலாசிரியர்
(மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் வெளீயிடு திமிரி. இராணிப்பேட்டை)
இந்த நூல் அறிமுக விழா செப்டம்பர் மாதம் ஒன்பதாவது நாள் சனிக்கிழமை (09//9/2023)காலை 10:30 அளவில் துவங்கி சென்னை கோல்டு மெயின் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது

இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் ஆளுமைகள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியின் வரவேற்புரையை திருமதி ஜெயப்பிரியா உமா சங்கர் (ஆசிரியர்) வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு திரு ந, அசோகன் கூடுதல் பதிவாளர்( பணி நிறைவு )
அவர்கள் தலைமை தாங்கினார்.
கவிஞர் துவாரகை நீல மணி அவர்கள் இந்த நூலினை வெளியிட்டார்.
முதல் படியை திரு ந, அசோகன், கூடுதல் பதிவாளர்( பணி நிறைவு ),
திருமதி வி. நந்தகுமாரி கூடுதல் பதிவாளர் (பணி நிறைவு)
திரு ம. மோகன் ,கூடுதல் பதிவாளர் (பணி நிறைவு)
திரு கே.பி.,பி பன்னீர்செல்வம், கூடுதல் பதிவாளர்( பணி நிறைவு)
திரு ஏ,எம்.ஜனார்த்தன முர்த்தி , இணைப்பதிவாளர்(பணி நிறைவு)
திரு வெ. திருநாவுக்கரசு, இணைப்பதிவாளர் (பணி நிறைவு)
திரு கலச ராமலிங்கம், ஆசிரியர் மக்கள் நெஞ்சம்
திரு கடற்கரய், கவிஞர்
திரு தா. சுரேஷ் பாபு, மென் பொறியாளர்.
திரு இரா,சீனுவாசன்,,நிலக்கிழார் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

கவிஞர் துவாரகை நீல மணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து கே.பி.,பி பன்னீர்செல்வம், கூடுதல் பதிவாளர்( பநி)
திரு ஏ,எம்.ஜனார்த்தன முர்த்தி , இணைப்பதிவாளர் (பநி)
திரு வெ. திருநாவுக்கரசு இணைப்பதிவாளர்( ப நி)
திரு கலச ராமலிங்கம், ஆசிரியர் மக்கள் நெஞ்சம் ,கவிஞர் கடற்கரய்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஏற்புரையை திரு வெ.பெருமாள் சாமி நூலாசிரியர் அவர்கள் வழங்கினார்
அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ள இயலாமல் போனதற்காக திரு க.மணி ஏழிலன், உமையாளர் ( மலர்க்கண்ணன் பதிப்பகம்) திமிரி. இராணிப்பேட்டை) அவர்களுக்கு தனது நன்றியை பலத்த கரகோஷத்துடன் தெரிவித்துக்கொண்டார் .
இறுதியாக தலைமை உரையை திரு ந, அசோகன், கூடுதல் பதிவாளர்( ப நி) அவர்கள் வழங்கினார்.
திரு ஜின்னா கூடுதல் பதிவாளர்( பணி நிறைவு) அவர்களின் உரையை திரு ஆனந்த கிருஷ்ணன் .துணைப்பதிவாளர் (பநி) அவர்கள் வாசித்தார்

திரு சந்திரசேகர் ,துணைப்பதிவாளர் (பநி) அவர்கள் நூலாசிரியருடான தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்
திரு பெ.. உமா சங்கர் ,மென் பொறியாளர் அவர்கள் இந்த நிகழ்ச்சியை மிகவும் அருமையாக தொகுத்து வழங்கினார்

செல்வி உ..இலக்கியா ,பொறியாளர் பயிற்சி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதாக நிறைவு பெற்றது

அனைவருக்கும் மதிய உணவு அங்கே வழங்கப்பட்டது .இந்த நிகழ்வின் சில புகைப்படங்களை இங்கே காணலாம்.
