Uncategorizedசினிமா

வக்கிரத்தை காட்டிய மாரி செல்வராஜ்..

வக்கிரத்தை காட்டிய மாரி செல்வராஜ்..

மாமன்னன் படத்தால் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் மாரி செல்வராஜின் சுயரூபம் நாளுக்கு நாள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இவர் எந்த அளவுக்கு கடுமையாக நடந்து கொள்வார் என்று பலரும் வெளிப்படையாக பேசிய நிலையில் தற்போது இவர் செய்த கொடுமைகளின் லிஸ்ட் இதுக்கு ஒரு எண்டே இல்லையா என்னும் அளவுக்கு பலரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

அதாவது படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனரை நான் அடிப்பேன் என்று அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்ட நிலையில் அவர்களை பேண்ட் அணியக்கூடாது, கைலி அல்லது கால் சட்டை தான் அணிந்து வர வேண்டும் என்று மாரி செல்வராஜ் கூறுவாராம். மேலும் நடிக்க வரும் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களை பல மணி நேரம் வெயிலில் நிற்க வைத்தும் கொடுமைப்படுத்துவாராம்.

இது குறித்து கேள்வி கேட்டால் அப்படித்தான் நான் செய்வேன், உங்கள் நிறம் மாற வேண்டும் என்று கூறுவாராம். இப்படி சூட்டிங் ஸ்பாட்டில் இவர் அனைவரிடமும் பாராபட்சம் பார்க்காமல் கடுமை காட்டி இருக்கிறார். பொதுவாக பா ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்கள் ஒரு குறிப்பிட்ட மையக்கருவை வைத்தே எடுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது

ஆனால் பா ரஞ்சித் எப்போதுமே மனிதநேயம் மிக்கவர். தன்னிடம் வேலை பார்ப்பவர்களை ஒரு நாளும் அவர் கொடுமைப்படுத்தியது கிடையாது. ஆனால் அவரிடம் வேலையை கற்றுக் கொண்ட மாரி செல்வராஜ் ஒரு அராஜகாரர் என்று பயில்வான் ரங்கநாதன் இப்போது வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார்.

மேலும் ஆதிக்க அரசியலை பற்றி பேசும் மாரி செல்வராஜ் உதயநிதியை வைத்தே தன்னுடைய வக்கிரத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறார். அரசியல் புள்ளியாக இருக்கும் அவரை பன்றிகளை மேய்ப்பவராக காட்டியதில் இருந்தே இது வெளிப்படையாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல் மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கும் பன்றிகளுக்கும் இடையே எந்த காட்சிகளும் கிடையாது.

ஆனால் உதயநிதியை தான் இப்படி அவர் காட்டியிருப்பார். மேலும் நாய்கள் பன்றிகளை கடித்து குதறுவது போன்ற வன்முறையான காட்சிகளும் இருக்கிறது. இதிலிருந்தே அவர் எப்படி பட்டவர் என தெரிகிறது என்று மாரி செல்வராஜின் முழு சுய ரூபத்தையும் பயில்வான் புட்டு புட்டு வைத்துள்ளார். உண்மையில் இது பற்றி படம் வெளிவந்த பிறகு பல விமர்சனங்கள் இருந்தாலும் தற்போது பயில்வானின் பேச்சு நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கிறது. அந்த வகையில் மண்டை கோளாறு பிடிச்ச இந்த இயக்குனரின் கொடுமை நிச்சயம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

courtesy:https://www.cinemapettai.com/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button